jaffna ini 900 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி: அனுமதி பெறாமல் 2 மாதங்கள் மருத்துவக் கல்வி பயின்ற மாணவி!

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில், பல்கலைக்கழக அனுமதி (Selection) பெறாத யுவதி ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக விரிவுரைகளில் கலந்துகொண்டதுடன், விடுதியிலும் தங்கியிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீடத்தின் புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமாகின. இதன்போது கண்டியைச் சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர், முறையான அனுமதி இன்றித் தன்னை ஒரு மாணவியாகக் காட்டிக்கொண்டு பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக ஏனைய மாணவர்களுடன் இணைந்து மருத்துவ பீட விரிவுரைகளுக்கும் அவர் தடையின்றிச் சென்று வந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவப் பாட கற்கைச் செயற்பாடுகளின் போது மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தொகுதியில் 202 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில், 203 மாணவர்கள் இருப்பதைக் கண்ட பேராசிரியர்கள் குழப்பமடைந்தனர்.

இது குறித்த தீவிர பரிசீலனையின் போதே, குறித்த யுவதி பல்கலைக்கழக அனுமதி பெறாதவர் என்பதும், சக மாணவிகளுடன் இணைந்து இரண்டு மாதங்களாக விரிவுரைகளில் பங்கேற்று வந்ததும் அம்பலமானது.

விசாரணையில், குறித்த யுவதி உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை மட்டுமே பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. மருத்துவ பீடத்திற்குத் தெரிவாவதற்கான வெட்டுப்புள்ளிகளை விட இது மிகக் குறைவானதாகும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மருத்துவ பீடம் இணைந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு (UGC) அறிக்கை சமர்ப்பித்துள்ளன. ஆணைக்குழு வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, அந்த யுவதி மீது சட்ட நடவடிக்கை எடுப்பதா அல்லது மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதா என்பது தீர்மானிக்கப்படும் என மருத்துவ பீடத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...