jaffna ini 900 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி: அனுமதி பெறாமல் 2 மாதங்கள் மருத்துவக் கல்வி பயின்ற மாணவி!

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில், பல்கலைக்கழக அனுமதி (Selection) பெறாத யுவதி ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக விரிவுரைகளில் கலந்துகொண்டதுடன், விடுதியிலும் தங்கியிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீடத்தின் புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமாகின. இதன்போது கண்டியைச் சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர், முறையான அனுமதி இன்றித் தன்னை ஒரு மாணவியாகக் காட்டிக்கொண்டு பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக ஏனைய மாணவர்களுடன் இணைந்து மருத்துவ பீட விரிவுரைகளுக்கும் அவர் தடையின்றிச் சென்று வந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவப் பாட கற்கைச் செயற்பாடுகளின் போது மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தொகுதியில் 202 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில், 203 மாணவர்கள் இருப்பதைக் கண்ட பேராசிரியர்கள் குழப்பமடைந்தனர்.

இது குறித்த தீவிர பரிசீலனையின் போதே, குறித்த யுவதி பல்கலைக்கழக அனுமதி பெறாதவர் என்பதும், சக மாணவிகளுடன் இணைந்து இரண்டு மாதங்களாக விரிவுரைகளில் பங்கேற்று வந்ததும் அம்பலமானது.

விசாரணையில், குறித்த யுவதி உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை மட்டுமே பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. மருத்துவ பீடத்திற்குத் தெரிவாவதற்கான வெட்டுப்புள்ளிகளை விட இது மிகக் குறைவானதாகும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மருத்துவ பீடம் இணைந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு (UGC) அறிக்கை சமர்ப்பித்துள்ளன. ஆணைக்குழு வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, அந்த யுவதி மீது சட்ட நடவடிக்கை எடுப்பதா அல்லது மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதா என்பது தீர்மானிக்கப்படும் என மருத்துவ பீடத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...