இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (03) இரவு இரண்டு பயணிகள் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
விமான நிலையத்தின் ஓடுபாதையில் நகர்ந்து கொண்டிருந்த ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானம் , இண்டிகோ ஏர்பஸ் ஏ320 விமானம் இரண்டு விமானங்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றையொன்று உரசிக்கொண்டன:
இரண்டு விமானங்களும் மிகக் குறைந்த வேகத்தில் (Taxing) பயணித்துக் கொண்டிருந்தபோது, அவற்றின் இறக்கைகளின் முனைகள் (Wing-tips) ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. விமானங்கள் வேகமாகக் செல்லாததால் ஒரு மிகப்பெரிய அனர்த்தம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது.
இரண்டு விமானங்களிலும் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் எவ்வித காயங்களுமின்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானங்களின் இறக்கை முனைகளில் சிறிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த விமானங்கள் உடனடியாக சேவையிலிருந்து நீக்கப்பட்டு, பயணிகளுக்கு மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்த விபத்து குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை (ATC) வழங்கிய அறிவுறுத்தல்களில் ஏதேனும் தவறு நடந்ததா? அல்லது விமானிகளின் கவனக்குறைவா? என்பது குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.