691d4cefe4b04fae5692dd8e
செய்திகள்உலகம்

ஜப்பானில் துறைமுகத்தில் பயங்கரத் தீ விபத்து: 170 கட்டிடங்கள் நாசம், ஒருவர் பலி!

Share

ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான சகனோஸ்கி (Saganoseki) நகரத்தின் துறைமுகப் பகுதியில் நேற்று (நவம்பர் 19) திடீரென ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், சுமார் 170 கட்டிடங்கள் எரிந்து நாசமாயின. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சகனோஸ்கி நகரம் கடற்கரை நகரமாகும். இங்கிருந்து பிடிக்கப்படும் உயர்தரமான சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த மீன் ஏற்றுமதிக்காக அமைக்கப்பட்ட துறைமுகம், மீன்களை உறைய வைக்கவும் பதப்படுத்தவும் கட்டப்பட்ட கிடங்குகள் (Warehouses), மற்றும் மீனவர்களின் வீடுகள் எனப் பல கட்டிடங்களுக்குத் தீ வேகமாகப் பரவியது.

தீவிபத்து குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் வந்து தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே துறைமுகத்தில் பரவிய தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த 170 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமான இக்கோர விபத்தில், ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
1749716262 image 42525c8345
அரசியல்இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதி!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை...

ranil wickremesinghe 1540622362 tile 1652346881 1652542509 1658301653
செய்திகள்இலங்கை

இந்தியா பயணத்தின்போது: ரணில் விக்கிரமசிங்க தம்பதியினர் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் வழிபாடு!

இந்தியாவுக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர்...

250925 AKD UNGA
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாத வலைக்குள் நாடு சிக்காது’: இலங்கை தினக் கொண்டாட்டம் மூலம் நல்லிணக்கம் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்படும்...

archuna 090325 seithy
செய்திகள்அரசியல்இலங்கை

அவருக்கு என்ன நடந்தது”: தந்தை காணாமல் போனது குறித்துக் கண்ணீருடன் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாட்டின் சுகாதார முறைமையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தான்...