tamilnaadi 65 scaled
இலங்கைசெய்திகள்

யுக்திய என்ற பெயரில் அரங்கேற்றப்படும் நாடகம்

Share

யுக்திய என்ற பெயரில் அரங்கேற்றப்படும் நாடகம்

யுக்திய என்ற பெயரில் பதில் பொலிஸ்மா அதிபரால் நாடகம் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு செயற்படுவதால் பாதாள உலகக் குழுவினரையும் கட்டுப்படுத்த முடியாது. போதைப்பொருளையும் அழிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மக்களே காணப்பட வேண்டும். கடந்த காலங்களில் மக்களின் தவறான தீர்மானங்களால் தவறான தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றனர்.

எனவே, இனிவரும் காலங்களில் மக்கள் சரியான தீர்மானத்தை எடுத்தால், நாம் அவர்களுடன் இருப்போம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசிய கட்சியும் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளன.

பொதுஜன பெரமுனவால் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரே தற்போதைய ஜனாதிபதியாக உள்ளார். ஐக்கிய தேசிய கட்சி மிகவும் பலவீனமடைந்த நிலைமையிலேயே உள்ளது. எனவே இந்த கூட்டணி எமக்கு பாரிய சவாலாக அமையப்போவதில்லை.

மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப கட்சி முறையாக செயற்பட்டால் யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும் நாம் அச்சப்படத் தேவையில்லை.

எமது நாட்டுக்கென கலாசாரமும் ஒழுக்கமும் காணப்படுகிறது. அவற்றுக்கு ஏற்பவே செயற்பட வேண்டும்.

யுக்திய என்ற பெயரில் பதில் பொலிஸ்மா அதிபரால் நாடகம் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு செயற்படுவதால் பாதாள உலகக் குழுவினரையும் கட்டுப்படுத்த முடியாது. போதைப்பொருளையும் அழிக்க முடியாது என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...