tamilni 59 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

கரிசனை காட்டுங்கள்: ரணிலிடம் சம்பிக்க கோரிக்கை

Share

‘யுக்திய’ நடவடிக்கையின் முடிவு குறித்து ஆழ்ந்த கரிசனை காட்டுமாறு ஜனாதிபதியிடம் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ‘யுக்திய’ நீதி நடவடிக்கையில் பெற்றோர்கள் இருவர் கைது செய்யப்படும்போது, அவர்களது வீடுகளில் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, பாதாள உலக செயற்பாடுகளில் சிறுவர்கள் இணையவும், சிறுமிகள் விபச்சாரத்திற்கு செல்லவும் வழியேற்படுகின்றது என்றும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு உட்பட பல பகுதிகளில் பல பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு வழங்க யாரும் இல்லை.

அத்துடன், சில குழந்தைகளுக்கு கூலித் திறன் இல்லை என்பதோடு சட்டத்தரணிகளுக்கு செலுத்த பணம் இல்லை என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்னும் போதைப்பொருள் விநியோகத் தொழிலின் சுறாக்களை பொலிஸார் கைது செய்ததாக எந்த செய்தியும் வரவில்லை.

முக்கிய சந்தேகநபர்களின் பெயர்கள் பெரும்பாலும் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பொலிஸாரால் இன்னும் அவர்களை கைது செய்ய முடியவில்லை.

மேலும், கடந்த நாட்களில் கனரக வாகனங்களை பயன்படுத்தி கடற்கரையில் உள்ள விருந்தகங்களை பொலிஸார் தகர்த்துள்ளனர்.

கடற்கரையில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற கடலோர பாதுகாப்பு துறைக்கு முழு அதிகாரம் உள்ளது.

எனினும், அவற்றை அகற்ற நீதிமன்ற உத்தரவு பெறுவதற்கு பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றி, போதைப்பொருள் வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தில் அந்த கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுவது சட்டத்திற்கு எதிரானதாகும்.

தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தகங்களை தகர்ப்பதற்கும் மற்றைய விருந்தகங்கள், தமது தொழிலைத் தொடர அனுமதிப்பதற்கும் இடையில் முக்கியமான தொடர்பு இருப்பதாக ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...