tamilni 59 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

கரிசனை காட்டுங்கள்: ரணிலிடம் சம்பிக்க கோரிக்கை

Share

‘யுக்திய’ நடவடிக்கையின் முடிவு குறித்து ஆழ்ந்த கரிசனை காட்டுமாறு ஜனாதிபதியிடம் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ‘யுக்திய’ நீதி நடவடிக்கையில் பெற்றோர்கள் இருவர் கைது செய்யப்படும்போது, அவர்களது வீடுகளில் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, பாதாள உலக செயற்பாடுகளில் சிறுவர்கள் இணையவும், சிறுமிகள் விபச்சாரத்திற்கு செல்லவும் வழியேற்படுகின்றது என்றும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு உட்பட பல பகுதிகளில் பல பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு வழங்க யாரும் இல்லை.

அத்துடன், சில குழந்தைகளுக்கு கூலித் திறன் இல்லை என்பதோடு சட்டத்தரணிகளுக்கு செலுத்த பணம் இல்லை என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்னும் போதைப்பொருள் விநியோகத் தொழிலின் சுறாக்களை பொலிஸார் கைது செய்ததாக எந்த செய்தியும் வரவில்லை.

முக்கிய சந்தேகநபர்களின் பெயர்கள் பெரும்பாலும் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பொலிஸாரால் இன்னும் அவர்களை கைது செய்ய முடியவில்லை.

மேலும், கடந்த நாட்களில் கனரக வாகனங்களை பயன்படுத்தி கடற்கரையில் உள்ள விருந்தகங்களை பொலிஸார் தகர்த்துள்ளனர்.

கடற்கரையில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற கடலோர பாதுகாப்பு துறைக்கு முழு அதிகாரம் உள்ளது.

எனினும், அவற்றை அகற்ற நீதிமன்ற உத்தரவு பெறுவதற்கு பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றி, போதைப்பொருள் வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தில் அந்த கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுவது சட்டத்திற்கு எதிரானதாகும்.

தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தகங்களை தகர்ப்பதற்கும் மற்றைய விருந்தகங்கள், தமது தொழிலைத் தொடர அனுமதிப்பதற்கும் இடையில் முக்கியமான தொடர்பு இருப்பதாக ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...