tamilnid 30 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்

Share

பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் பெறுமதி சேர் வரி(VAT) உள்ளிட்ட அதிகளவான வரிச் சுமையை மக்கள் மீது இந்த அரசாங்கம் திணித்துள்ளமையே என கூறியுள்ளார்.

இதனால் இளைய சமூகம் எதிர்ப்பார்ப்பிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை விடவும் அபிவிருத்தி குறைந்த நாடுகள் நோக்கி இளைஞர் யுவதிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்திஜீவிகள், தொழில் வல்லுனர்கள் போன்றே இளைஞர் யுவதிகளும் நாட்டை விட்டு பெருவாரியாக வெளியேறிச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாகத் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தி அரசாங்கம் செயற்படத் தவறியுள்ளதாகவும் நாட்டின் நிகழ்காலமும் எதிர்காலமும் ஆரோக்கியமானதல்ல என புரிந்து கொண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...