124723826 gettyimages 90913551
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காத்தான்குடியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது: பாகிஸ்தான் தயாரிப்புகள் மீட்பு!

Share

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் சட்டவிரோத போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த இளைஞர் ஒருவரைக் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ. ரஹீம் தலைமையில், புதன்கிழமை (31) மாலை முன்னெடுக்கப்பட்ட திடீர் வீதிச் சோதனையின் போது இந்தச் சந்தேக நபர் பிடிபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இளைஞர் ஆவார். இவரிடமிருந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 84 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாகப் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் இவ்வாறான தொடர் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...