26 2
இலங்கைசெய்திகள்

மருத்துவமனையின் தவறால் உயிரிழந்த யுவதி : அதிர்ச்சியில் பெற்றோர்

Share

மருத்துவமனையின் தவறால் உயிரிழந்த யுவதி : அதிர்ச்சியில் பெற்றோர்

பண்டாரவளையில் யுவதி ஒருவரின் மரணத்திற்கு மருத்துவமனை அதிகாரிகள் தான் காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தேவ்மினி சமத்கா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீண்ட நாட்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த யுவதிக்கு உரிய சிகிச்சையளிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

17 ஆம் திகதி காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கும் அவருக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை எனவும், பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிப்பதில் கூட தாமதம் ஏற்பட்டதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.

தனது மகளின் உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கூட அனுமதிக்கப்படவில்லை என்று அவரது தாயார் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். சரியான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்.

மருத்துவமனையின் தவறு காரணமாக மகளை இழந்துவிட்டோம் என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த யுவதி இம்முறை உயர்தர பரீட்சை எழுதுவதற்கு தயாராக இருந்ததாக பெற்றோர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...