26 2
இலங்கைசெய்திகள்

மருத்துவமனையின் தவறால் உயிரிழந்த யுவதி : அதிர்ச்சியில் பெற்றோர்

Share

மருத்துவமனையின் தவறால் உயிரிழந்த யுவதி : அதிர்ச்சியில் பெற்றோர்

பண்டாரவளையில் யுவதி ஒருவரின் மரணத்திற்கு மருத்துவமனை அதிகாரிகள் தான் காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தேவ்மினி சமத்கா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீண்ட நாட்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த யுவதிக்கு உரிய சிகிச்சையளிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

17 ஆம் திகதி காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கும் அவருக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை எனவும், பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிப்பதில் கூட தாமதம் ஏற்பட்டதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.

தனது மகளின் உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கூட அனுமதிக்கப்படவில்லை என்று அவரது தாயார் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். சரியான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்.

மருத்துவமனையின் தவறு காரணமாக மகளை இழந்துவிட்டோம் என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த யுவதி இம்முறை உயர்தர பரீட்சை எழுதுவதற்கு தயாராக இருந்ததாக பெற்றோர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...