24 666d4b6c92222
இலங்கைசெய்திகள்

குறைவடையும் இளம் பெருந்தோட்ட தொழிலாளர்கள்

Share

குறைவடையும் இளம் பெருந்தோட்ட தொழிலாளர்கள்

பெருந்தோட்ட தொழிலுக்கான பயிற்சி பெற்ற இளம் தொழிலாளர்கள் இல்லாதது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் பெருந்தோட்டங்களில் உள்ள இளைஞர் சமூகத்தில் பலர் வேறு தொழில்களுக்கு திரும்பியுள்ளதாகவும் அரச பெருந்தோட்ட முயற்சியாண்மை மறுசீரமைப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

நியாயமான சம்பளம் மற்றும் முறையான வசதிகள் இன்மை காரணமாக இளம் திறமையான தொழிலாளர்கள் பெருந்தோட்ட தேயிலை தொழிலை விட்டு வெளியேறுவதாக தோட்ட முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், சில உள்ளூர் தேயிலை தோட்டங்களில் 20 முதல் 30 வயது வரையிலான இளம் பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை நான்கு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஐந்து பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் தகவல்களின் பிரகாரம் அவற்றில் பணிபுரியும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு நிறுவனத்தில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 3.8 வீதமாகவும் மற்றுமொரு நிறுவனத்தில் 4.4 வீதமாகவும் காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மற்றைய மூன்று நிறுவனங்களிலும் பயிற்சி பெற்ற இளம் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6.3, 6.5 மற்றும் 9.3 சதவீதம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...