rtjy 184 scaled
இலங்கைசெய்திகள்

இளம் தாயொருவர் 11 மாத பெண் குழந்தையுடன் மாயம்!

Share

இளம் தாயொருவர் 11 மாத பெண் குழந்தையுடன் மாயம்!

அங்குருவத்தோட்ட, உரதுதாவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இளம் தாயும், அவரது 11 மாத பெண் குழந்தையும் காணாமல்போயுள்ளதாக அங்குருவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உரதுதாவ பகுதியினை சேர்ந்த வாசனா குமாரி என்ற 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், அவரது 11 மாத மகளும் நேற்றுமுன்தினம் (18) முதல் காணாமல்போயுள்ளதாக கணவர் அங்குருவாதொட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல்போன பெண்ணின் கணவரின் மைத்துனரான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது பெண்ணின் வீட்டின் சமையலறைப் பகுதியில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கதவில் சில கறைகளும், தரையில் இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காணாமல்போன பெண்ணின் கணவன் தனது மைத்துனர் வீட்டிற்கு வந்துள்ளதாகவும், அவர் குறித்து சந்தேகம் உள்ளதாகவும் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், கணவர் இல்லாத நேரத்தில் மைத்துனர் வந்து செல்வது தொல்லையாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவி இரண்டு தடவைகள் தன்னிடம் கூறியதாகவும் அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது பொலிஸ் காவலில் உள்ள நபர் மூன்று பெண்களிடம் தகாத வார்த்தை பிரயோகம் செய்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளம் தாய் காணாமல்போனதையடுத்து, சந்தேகநபர் தனது மனைவியுடன் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக வந்த முச்சக்கர வண்டியை மோப்ப நாய் சுற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, இளம் தாய் மற்றும் 11 மாதகுழந்தை காணாமல்போனமை தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...