18 12
இலங்கைசெய்திகள்

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

Share

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழ் (Jaffna) வடமராட்சிப் பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ். வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று (9.12.2024) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சங்கரன் தோட்டம், கரணவாய் தெற்கைச் சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்ற திருமணமாகாத பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இவர் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், வீட்டுக்கு அருகாமையில் உள்ள பனங்காணி ஒன்றில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். (Jaffna) பருத்தித்திறை – வராத்துப்பளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து எனும் 42 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்திறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் காணப்பட்டு நேற்று மீட்கப்பட்டிருந்தது.

தனது தாயரை நேற்று முன்தினம் பிற்பகலிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்றவேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடி பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்துள்ள நிலையில் அக்கிணற்றை அவரது மகன் எட்டிப்பார்த்த வேளை கம்பி வலையால் மூடிய கிணற்றிற்குள் சடலம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் தான் அதன் வலி தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் தனது மரணத்திற்கு தானே காரணம் என்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தவறான முடிவெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி, அல்வாயில் இளம் தாய் ஒருவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.

அல்வாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா (வயது – 32) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வீட்டிலிருந்த போது அவர் திடீர் சுகவீனமுற்றதைத் தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்தே சிகிச்சை பயனளிக்காமல் அவர் உயிரிழந்தார். நெல்லியடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பருத்தித்துறை காவல்துறை பிரிவில் கற்கோவளம் – வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தனது தாயாரை நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்ற வேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடிப் பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்த நிலையில் அந்தக் கிணற்றை அவரது மகன் எட்டிப் பார்த்த வேளை சடலம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாகக் காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து என்கின்ற 42 வயதுடைய தாயார் ஆவார்.

இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...