11 1
இலங்கைசெய்திகள்

யாழ். அரியாலையில் துயர சம்பவம் – உறக்கத்திலேயே இளம் குடும்பப் பெண் மரணம்

Share

யாழ். அரியாலையில் துயர சம்பவம் – உறக்கத்திலேயே இளம் குடும்பப் பெண் மரணம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சாப்பிட்டுவிட்டு உறங்கிய இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த துயர சம்பவம் நேற்று (1.1.2025) யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

30 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்று (01.01.2025) காலை 9 மணியளவில் உணவு அருந்திவிட்டு உறங்கியுள்ளார்.

பின்னர் குறித்த பெண்ணின் தாயார் மதிய உணவுக்காக அவரை எழுப்பியவேளை அசைவற்று காணப்பட்டார்.

இந்நிலையில், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இதனையடுத்து, சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

000000

Share
தொடர்புடையது
images 2 1
இலங்கைசெய்திகள்

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – தமிழ்த் தேசிய கூட்டணி சந்திப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழில் இடம்பெற்றுள்ளது....

25 683c8c39bbd50
இலங்கைசெய்திகள்

குடிவரவு கொள்கைகளை விரைவில் திருத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

தற்போதுள்ள, குடிவரவு சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். இந்தியாவில்...

image a23900d6f4 920x425 1
இலங்கைசெய்திகள்

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சியின் பிரதேச சபைகளில் உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்...

25 683cfd13e6c54
இலங்கைசெய்திகள்

நைஜீரியாவில் பேருந்து விபத்து: 22 விளையாட்டு வீரர்கள் பலி

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவின் பாலம் ஒன்றில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22...