இலங்கைசெய்திகள்

இளம் தந்தை கொடூரமாக வெட்டிக் கொலை

Share
15 2
Share

இளம் தந்தை கொடூரமாக வெட்டிக் கொலை

குளியாபிட்டிய, ரத்மலேவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

31 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் குளியாபிட்டிய, கலஹிதியாவ பிரதேசத்தில் வசித்து வந்த இசங்க தமித் ராஜபக்ஷ என்ற ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு எதிராக குளியாபிட்டிய நீதிமன்றத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குளியாப்பிட்டிய தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிடச் செல்வதற்கு முன்னர், இவரும் மேலும் பலர் இரத்மலேவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் மது விருந்து நடத்தியுள்ளனர்.

வாக்குவாதம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்கு கைகோடாரி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வீட்டில் மது விருந்தின் போது வந்ததாகக் கூறப்படும் நபர் மற்றும் குடியிருப்பாளர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...