22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

Share

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஊடகங்களுக்கு உரையாற்றிய சுகாதார மேம்பாட்டு பணியக அதிகாரி ஒருவர், உடலில் போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லாத இரத்தக் கோளாறைக் கண்டறிய கிடைக்கக்கூடிய விவரங்கள் மற்றும் சோதனைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

குடும்பங்கள் மூலம் பரவும் தலசீமியாவை கண்டறிய முழு இரத்த எண்ணிக்கை உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“திருமணத்திற்கு முன்பு இளைஞர்கள் செய்யும் இந்த சோதனைகள் தங்கள் குழந்தைகளுக்கு இரத்தக் கோளாறினால் பாதிக்கப்படுவதனை தடுக்க உதவும்.

இதன் காரணமாக இளைய தலைமுறையினர் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...