கொழும்பில் திருமணமாகி 90 நாட்களில் உயிரிழந்த இளம் கணவன்

tamilni 389

கொழும்பில் திருமணமாகி 90 நாட்களில் உயிரிழந்த இளம் கணவன்

கொழும்பின் புறநகர் பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமான இந்த இளைஞன், மூன்று நாட்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் கொட்டாவ – பாடசாலை மாவத்தையில் உள்ள வீடொன்றில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார்.

இந்த இளைஞன் வீட்டின் மின் விசிறியில் இயங்காமல் இருந்த மின்விசிறியை சீர் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

டிப் சுவிட்ச் செயலிழந்த மின் விநியோகத்தில் இருந்து பாதுகாப்பற்ற மின்சாரத்தைப் பயன்படுத்தியதால் மின்கசிவு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தின் பிரேத பரிசோதனை ஹோமாகம வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கவிஷ்க விஜயதுங்க என்ற 22 வயதுடைய இளைஞனே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

Exit mobile version