tamilni 144 scaled
இலங்கைசெய்திகள்

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் யுக்திய

Share

இலங்கை பொலிஸார் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

தேடல் நடவடிக்கைகளின் போது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை பற்றிய அறிக்கைகள் கிடைத்துள்ளன.

எனவே இது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஆணைக்குழு கோரியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையின்போது, 2023, டிசம்பர் 17 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான இரண்டு வார காலப்பகுதியில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் இதன்போது, சித்திரவதை, மனிதாபிமானமற்ற நடத்தை, தன்னிச்சையான கைதுகள் மற்றும் நடவடிக்கையுடன் தொடர்புடைய தடுப்புக்காவல்கள் போன்ற பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஏனவே இந்த நடவடிக்கைகள், ‘நியாயம்’ என்று பொருள்படும் ‘யுக்திய’ என்ற தலைப்பிற்கு முரணானது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர்களை எல்லா நேரங்களிலும் கண்ணியமாக நடத்துவதன் மூலம் இந்த உரிமையை நிலைநிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

அத்துடன் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றின்படி, சித்திரவதைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்ட போதிலும் தொடர்ந்தும் சம்பந்தப்பட்டவர்கள் பதவியில் உள்ளனர் என்பதையும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...