tamilnih 95 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

கூட்டணி மூலம் தேர்தலை சந்திப்போம்: சம்பிக ரணவக

Share

கூட்டணி மூலம் தேர்தலை சந்திப்போம்: சம்பிக ரணவக

எதிர்வரும் தேர்தல்களை பரந்துபட்ட கூட்டணியொன்றின் ஊடாக சந்திக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

பெந்தர பிரதேசத்தில் நேற்று(27.01.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நடைமுறை வேலைத்திட்டம் ஒன்று அவசியம். அதற்காக எதிர்காலத்தில் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

எங்களது கூட்டணி மூலமாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொருத்தமான செயற்திட்டங்களை வகுத்துக் கொள்ள உத்தேசித்துள்ளோம்.

அதனை பொதுமக்கள் முன் சமர்ப்பித்து அதற்கான மக்கள் ஆணையை தேர்தல்களில் பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளோம்.

எங்கள் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யார் களமிறங்குவார்கள் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எதிர்காலத்தில் அது குறித்து நிச்சயம் அறிவிப்போம்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...