19 1
இலங்கைசெய்திகள்

பொய்களால் ஆட்சி அமைத்தவர்களே திசைகாட்டியினர்: ரணில் சாடல்

Share

பொய்களால் ஆட்சி அமைத்தவர்களே திசைகாட்டியினர்: ரணில் சாடல்

திசைகாட்டியினர் பொய் சொல்லியே ஆட்சியைப் பிடித்தனர் என்றும், அவர்களிடம் அரசியல் அனுபவம் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கடுமையாக சாடியுள்ளார்.

மாத்தறையில் நேற்று(04.11.2024) நிகழ்வொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். நாட்டின் மிகவும் கடினமான காலங்களில் தங்கள் அனுபவத்தால் நாட்டைக் காப்பாற்றியவர்கள் இங்கே உள்ளனர்.

அரசாங்கத்தை நாங்கள் நடத்தி செல்ல வேண்டியுள்ளது. வங்குறோத்து நிலை நமது கடனை மீண்டும் நிலையானதாக மாற்றியுள்ளது.

உடன்படிக்கைகளின் படி செயற்பட்டு கடன் நிலையிலிருந்து வெளியே வருவோமென உறுதியளித்துள்ளோம்.

அந்தப் பணியைச் செய்யக்கூடியவர்களை நாம் இங்கு நியமிக்க வேண்டும். அதனால்தான் அனுபவசாலிகள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்’’ என்றார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...