tamilni 49 scaled
இலங்கைசெய்திகள்

மிக மோசமான போக்குவரத்து நெரிசல் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த நகரம்

Share

மிக மோசமான போக்குவரத்து நெரிசல் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த நகரம்

அமெரிக்காவின் நியூயார்க்(New York) நகரமே உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாக அறியப்படுவதுடன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இந்த நகரம் அதிகரித்த போக்குவரத்து நெரிசல் பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாக அறியப்படும் நியூயார்க் நகரத்தில், போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் நேரத்தில் பல பில்லியன் டோலர் தொகையை மக்கள் இழப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி,
சராசரியாக ஒரு சாரதி கடந்த ஆண்டில் நியூயார்க் நகர போக்குவரத்து நெரிசலில் சிக்கி 101 மணி நேரம் தாமதித்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கிக் கொண்டு காத்திருப்பதால், பொருளாதாரத்தில் 9.1 பில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் பட்டியலில் 2 ஆவது இடத்தில் மெக்சிகோ(Mexico) , 3 ஆவது இடத்தில் லண்டன்(London), 4 ஆவது இடத்தில் பாரிஸ்(Paris) மற்றும் 5 ஆவது இடத்தில் சிகாகோ இடம்பிடித்துள்ளன.

இதேவேளை, போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்குவதால் 2023ஆம் ஆண்டில் 70.4 பில்லியன் டொலர் தொகையை ஒட்டுமொத்தமாக அமெரிக்கா இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், சராசரியாக 42 மணி நேரம் சாரதிகள் போக்குவரத்தில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...