24 661e375d44919
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயிரிடப்படவுள்ள புதிய அன்னாசிப்பழ வகை

Share

இலங்கையில் பயிரிடப்படவுள்ள புதிய அன்னாசிப்பழ வகை

உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Sweet Pineapple (Ananas comosus) இலங்கையில் பயிரிடுவதற்கான அவசர பரிந்துரைகளை விவசாயத் திணைக்களம் வழங்க உள்ளது.

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழம் இலங்கையில் இருந்து பதிவாகியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார், எனவே, இலங்கையில் பயிரிடப்படும் அன்னாசிப்பழங்களுக்கு உலக சந்தையில் அதிக தேவை உள்ளது.

இந்நிலையில், MD 2 அன்னாசி வகைக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி நிலவுகின்ற போதிலும், இந்த அன்னாசி வகையை இந்த நாட்டில் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அத்தோடு, இனிப்புச் சுவை மற்றும் குறைந்த அமிலத்தன்மை கொண்ட இந்த அன்னாசி வகையை இலங்கையில் பயிரிட நடத்தப்பட்ட ஆராய்ச்சியும் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, பயிர் வெளியீட்டுக் குழுவின் பரிந்துரைகளின் கீழ், இலங்கையில் சாகுபடிக்கு இந்த MD 2 அன்னாசி வகையை பரிந்துரைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அமைச்சர் விவசாயத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், விவசாயத் துறை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையில் இந்த MD 2 அன்னாசிப்பழத்தின் பயிர்ச்செய்கைக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெற்றியடைந்துள்ளதுடன், விவசாயிகளும் இந்த அன்னாசி வகையை பயிரிட விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...