அதிகரிக்கும் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை!
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை!

Share

அதிகரிக்கும் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை!

செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது 160,000 ரூபாவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவை தொட்டுள்ளது.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவாக காணப்படுகிறது.

அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் தற்போது தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்து வரும் அதேவேளை பல பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...