2 41
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் 200 மில்லியன் டொலர்கள்

Share

இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் 200 மில்லியன் டொலர்கள்

அடுத்த மூன்று மாதங்களில் 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று பெரிய திட்டங்களுக்கு நிதியளிக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணை தவிசாளர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser) , இலங்கைக்கான தனது இரண்டு நாள் பயணத்தை இன்று (22) முடித்துக்கொண்டார்.

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற அரசு அதிகாரிகள், தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் மேம்பாட்டு பங்காளிகளைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தினார்.

மேலும், ரைசரின் வருகையின் போது அரசாங்கத்தின் திட்டங்களான வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மேம்பாடு மற்றும் க்ளீன் சிறிலங்கா ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று பெரிய திட்டங்களுக்கு நிதியளிக்க உலக வங்கி திட்டமிட்டு மீண்டும் தனது ஆதரவை உறுதி படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த திட்டங்கள் கிராமப்புற மேம்பாடு மற்றும் கல்விக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வசதியை ஏற்படுத்தும் நோக்கிலும் முன்னேடுக்கப்படவுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...