இலங்கைக்கு உலக வங்கி ஒப்புதல்
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு உலக வங்கி ஒப்புதல்

Share

இலங்கைக்கு உலக வங்கி ஒப்புதல்

பாதீட்டு ஒத்துழைப்பு மற்றும் நலன்புரிகளுக்காக உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு முக்கியமான வரவு செலவுத் திட்டம் மற்றும் நலன்புரி ஆதரவை வழங்கும் என நம்பப்படுகிறது.

மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன்( IMF) இலங்கை ஒரு ஒப்பந்தத்தை எட்டியதன் பின்னர் இந்த ஒதுக்கீடு மிகப்பெரிய நிதி உதவியாக அமைகிறது.

700 மில்லியன் மொத்த தொகையில் 500 மில்லியன் டொலர்கள் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் வரவு செலவுத் திட்ட உதவிக்காக ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள $200 மில்லியன் நலன்புரி ஆதரவை நோக்கி, குறிப்பாக தற்போதைய நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்காக ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...