24 66568cde6b7c7
இலங்கைசெய்திகள்

நள்ளிரவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

Share

நள்ளிரவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர் எனவும் நேற்று அதிகாலை லியனகேமுல்ல பிரதேசத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இரவு விடுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதல் நீண்ட தூரம் சென்றமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உஸ்கொட மனகே திசர மதுவந்தி என்ற 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவர் காலி மேற்கு படுவத்த நெலுவ பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

6 வருடங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிக்காக வந்தவர், பின்னர் சீதுவையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணிபுரியும் நபருடன் அந்தப் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் தற்காலிகமாக தங்கியுள்ளார்.

இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற சம்பவமொன்றின் அடிப்படையில், தங்கியிருந்த நபருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இவரும் புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு முன்பாக குறித்த நபர் நடந்து செல்லும் காட்சி பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியிருந்தது.

இந்த தேவாலயத்திற்கு எதிரே உள்ள வீதியிலேயே குறித்த பெண் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் அவரது சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...