8 45
இலங்கைசெய்திகள்

வீட்டினுள் நுழைந்து விஷ ஊசி போட்ட நபர் – பரிதாபமாக உயிரிழந்த பெண்

Share

வீட்டினுள் நுழைந்து விஷ ஊசி போட்ட நபர் – பரிதாபமாக உயிரிழந்த பெண்

70 வயது பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் திக்வெல்ல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணி தகராறு தொடர்பான நீதிமன்ற வழக்கின் பின்னணியில் இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

டிக்வெல்ல (Dickwella) தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 70 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவர் விஷ ஊசியை உட்செலுத்தப்பட்டதாக கூறி மாத்தறை, பதிகம வைத்தியசாலையில் டிசம்பர் 20ஆம் திகதி பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு 4 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (24) மாலை உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்குள் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் விஷ ஊசி போட்டுவிட்டு தப்பிச் சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் திக்வெல்ல காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த வீட்டிற்கு அருகில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டன.

அதன்படி, சம்பந்தப்பட்ட பெண்ணைச் சந்திப்பதற்காக ஒருவர் வீட்டிற்குள் நுழைவதைக் காட்டுகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, அடையாளம் தெரியாத நபரும் சம்பந்தப்பட்ட பெண்ணும் பீதியுடன் வீட்டை விட்டு வெளியே வருவதைக் கவனிக்கிறார்கள்.

சிசிடிவி காட்சிகளில், பெண்ணின் கழுத்தைப் பிடித்து, சாலையைக் கடந்து அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு ஓடுவதும், விஷ ஊசி போட்டவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதும் தெரிகிறது.

சம்பவம் தொடர்பில் நாம் வினவிய போது, பெண்ணுக்கு விஷ ஊசி போட்டதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டு இன்று (25) மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக திக்வெல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் சட்ட வைத்திய அறிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...