24 661890c8312db
இலங்கைசெய்திகள்

கடை ஒன்றுக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

Share

கடை ஒன்றுக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

காலியில் (Galle) கடையொன்றில் வைத்து பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

உரகஸ்மன்ஹந்திய (Uragasmanhandiya) பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்டிக்கர் கடையொன்றில் நேற்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊராகொட விதானகே யமுனா நிரோஷனி விதான என்ற வயது 43 பெண்ணே கடையில் உள்ள அறையொன்றில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று காலை எல்பிட்டிய பதில் நீதவான் வருகை தந்து பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

நேற்று அதிகாலை 5.45 மணியளவில் மனைவி கணனியில் வேலை செய்து கொண்டிருந்த போது இருவர் வந்து கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் எல்பிட்டியைச் சேர்ந்த லால் நிஷாந்த என்ற 25 வயதுடைய இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கொலையாளிகள் இருவரும் மனைவியிடம் பணம் கேட்டதாகவும், பணத்தை கொடுக்காததால், கூரிய ஆயுதத்தால் அவரது கழுத்தில் தாக்கியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் கணவரின் வாக்குமூலங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், கொலையாளிகள் எந்த திசையில் தப்பிச் சென்றுள்ளனர் என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எல்பிட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட நபரின் கணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா என்பது குறித்தும் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...