22
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து தங்கத்துடன் வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து, தீர்வை வரி செலுத்தாமல் வெளியேற முயற்சித்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் மத்தேகொட பகுதியில் வசிக்கும் 63 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

அவர் நேற்று காலை 07.30 மணிக்கு டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் வந்தடைந்தார்.

சந்தேக நபர் கொண்டு வந்த பைகளில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 தங்க சங்கிலிகள், ஒரு தங்கக் கட்டி, 03 வளையல்கள், ஒரு ஜோடி காதணிகள் மற்றும் கைசங்கியிகள், 06 மடிக்கணினிகள் மற்றும் 11 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு பிரதேச புலனாய்வுப் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரான பெண் சட்டவிரோதமாக கொண்டு வந்த பொருட்களும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...