22
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து தங்கத்துடன் வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து, தீர்வை வரி செலுத்தாமல் வெளியேற முயற்சித்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் மத்தேகொட பகுதியில் வசிக்கும் 63 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

அவர் நேற்று காலை 07.30 மணிக்கு டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் வந்தடைந்தார்.

சந்தேக நபர் கொண்டு வந்த பைகளில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 தங்க சங்கிலிகள், ஒரு தங்கக் கட்டி, 03 வளையல்கள், ஒரு ஜோடி காதணிகள் மற்றும் கைசங்கியிகள், 06 மடிக்கணினிகள் மற்றும் 11 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு பிரதேச புலனாய்வுப் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரான பெண் சட்டவிரோதமாக கொண்டு வந்த பொருட்களும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...