இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

22 4

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

இந்த குடும்ப வன்முறை சம்பவங்கள், குடும்ப நல்வாழ்வு மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் குடும்ப வன்முறை சம்பவங்கள் தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு மாத்திரம் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 12,198 குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டதாக அரச தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் உதவி கோருபவர்களில் 91சதவீதமானவர்கள் பெண்கள் எனவும், 9 சதவீதமானவர்கள் மட்டுமே ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version