வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்
இலங்கைசெய்திகள்

வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

Share

வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

ஹக்மீமன, ஹியார் பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 47 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் நேற்று காலை வேயங்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் கடந்த 04ஆம் திகதி இரவு பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்து வன்புணர்வு செய்த பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகநபர் பெண்ணிடம் இருந்த நகைகள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.

அக்மீமன, ஹியாரே பகுதியிலுள்ள வீட்டில் 65 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் நேற்று இரவு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணின் மகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, இது தெரியவந்துள்ளது.

பின்னர் விசாரணையில் அவர் அணிந்திருந்த நகை மற்றும் காதணிகளை யாரோ எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அவரது முகத்திலும் காயம் இருந்ததை அவதானித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...