24 6729f19406435 1
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் இருந்து திருகோணமலைக்கு வருகை தந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Share

வெளிநாட்டில் இருந்து திருகோணமலைக்கு வருகை தந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த பெண் ஒருவர் திருகோணமலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இன்று (05.11.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் தனியார் மருத்துவமனை உரிமையாளரின் மனைவி (63வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

வெளிநாட்டில் இருந்து இன்று அதிகாலை வருகை தந்த குறித்த பெண் வைத்தியசாலை கட்டிடத் தொகுதியில் உள்ள மூன்றாவது மாடியில் தனது அறையை திறப்பதற்காக சென்றுள்ளார்.

இதன்போது அறைக்குப் பக்கத்தில் இருந்த மைத்துனரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கத்திக்குத்தை மேற்கொண்ட சந்தேகநபர் தனியார் மருத்துவமனையின் உரிமையாளின் சகோதரர் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி சந்தேகநபர் திருகோணமலை தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...