24 660782b61b655
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 30 வருடங்களாக பெரும் மோசடியில் சிக்கிய பெண்

Share

இலங்கையில் 30 வருடங்களாக பெரும் மோசடியில் சிக்கிய பெண்

அஹுங்கல்ல பிரதேசத்தில் சுமார் 30 வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குடு நோனி என்ற அனோமா சாந்திக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நேற்றைய தினம் (29) சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதன்போது காலி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மீன்பிடிக் கப்பல்களுக்கும் தடை விதித்துள்ளனர்.

ஏறக்குறைய 30 வருடங்களாக அஹுங்கல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் போதைப்பொருள் விற்பனை செய்து சம்பாதித்த பணத்தில் இந்த கப்பல்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், அவர் தனது உறவினர்கள் பெயரில் படகுகளை வாங்கியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நேற்று காலை காலி மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று மீன்பிடி படகுகளை கண்காணித்துள்ளார்.

இதேவேளை, அஹுங்கல்ல பிரதேசத்தில் சந்தேகநபருக்கு சொந்தமான 03 வீடுகள், 05 கடைகள் மற்றும் 05 காணிகளும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபருக்கு சொந்தமான லொறி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு பெக்ஹோ, ஒரு வான் மற்றும் இரண்டு முச்சக்கரவண்டிகள் என்பனவற்றையும் பொலிஸ் காவலில் எடுத்துச்சென்றுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் 52 இலட்சம் ரூபாவை தனியார் நிறுவனமொன்றின் ஊடாக தயாரித்து வந்த மீன்பிடிக் கப்பலையும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கையகப்படுத்தியுள்ளனர்.

அதன்படி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட குடு நோனிக்கு சொந்தமான சொத்துக்களின் மொத்த பெறுமதி 11 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சொத்து குவிப்பு தொடர்பில் சந்தேகநபரான பெண் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட ஆறு பேர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...