14 scaled
இலங்கைசெய்திகள்

கனடா அனுப்புவதாக பண மோசடி செய்த பெண்

Share

கனடா அனுப்புவதாக பண மோசடி செய்த பெண்

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து தலைமறைவாக இருந்த நிலையில் மீண்டும் நாடு திரும்பிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தகவலை பாணந்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபர் 2016 ஆம் ஆண்டு பாணந்துறை பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றை நடத்தி அதே பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருடன் (தற்போது உயிரிழந்து விட்டார்) இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களின் மோசடியில் சிக்கிய வத்தளை, பாணந்துறை, கொழும்பு, மாத்தறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்லவதற்காக 12,13,15, 25 இலட்சம் ரூபாவை வழங்கியதாக பாணந்துறை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த நான்கு முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அதே வருடத்தின் பிற்பகுதியில் கனடாவுக்கு தப்பிச் சென்ற சந்தேகநபர், இம்மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு திரும்பியுள்ளதாக கிடைத்த தகவலின் பிரகாரம், மாலம்பே பகுதியில் வைத்து எஃபே (27) என்பவரை இரவு வேளையில் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக பயணத்தடையும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் இவ்வாறு வேலை வழங்குவதாகக் கூறி வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்தாரா என்பதை அறிய நாட்டிலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...