5 52
இலங்கைசெய்திகள்

அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளுக்கும் 10 வீத வரி

Share

அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளுக்கும் 10 வீத வரி

அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரியை வங்கிகள் கழித்துக் கொள்வதாக தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayanta Fernando) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேற்றையதினம் (26) பதில் வழங்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வரி விலக்கு அளிக்கப்பட்டவர்களிடமிருந்து அறவிடப்பட்ட வரித்தொகையை மீள வழங்குவதற்கான பொறிமுறையை அரசாங்கம் முன்வைக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த பொறிமுறையை உருவாக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, வரி விலக்கு அளிக்கப்பட்டவர்களிமிருந்து 10 வீத வரியை அறவிடுவதன் மூலம் அநீதிகள் இழைக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில், அரசாங்கம் சமீபத்தில் வைப்பு வரியை 5 முதல் 10 வீதமாக உயர்த்தியது.

ஆனால் ரூ. 150,000 மாதாந்த வருமான வட்டி பெறுபவர்களுக்கு மாத்திரமே இந்த வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...