5 52
இலங்கைசெய்திகள்

அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளுக்கும் 10 வீத வரி

Share

அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளுக்கும் 10 வீத வரி

அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரியை வங்கிகள் கழித்துக் கொள்வதாக தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayanta Fernando) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேற்றையதினம் (26) பதில் வழங்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வரி விலக்கு அளிக்கப்பட்டவர்களிடமிருந்து அறவிடப்பட்ட வரித்தொகையை மீள வழங்குவதற்கான பொறிமுறையை அரசாங்கம் முன்வைக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த பொறிமுறையை உருவாக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, வரி விலக்கு அளிக்கப்பட்டவர்களிமிருந்து 10 வீத வரியை அறவிடுவதன் மூலம் அநீதிகள் இழைக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில், அரசாங்கம் சமீபத்தில் வைப்பு வரியை 5 முதல் 10 வீதமாக உயர்த்தியது.

ஆனால் ரூ. 150,000 மாதாந்த வருமான வட்டி பெறுபவர்களுக்கு மாத்திரமே இந்த வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...