24 66345397bbe62
இலங்கைசெய்திகள்

விரைவில் பேச்சுவார்த்தை! நிதி அமைச்சு தகவல்

Share

இறையாண்மை பத்திர பதிவுதாரர்களின் தற்காலிக குழுவின் பிரதிநிதிகளுடன் இலங்கை விரைவில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடத்தப்படவுள்ள இந்த பேச்சுவார்த்தைக்கான சரியான திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“12 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான கடனை மறுசீரமைப்பதற்கான சர்வதேச பத்திரதாரர்களின் முன்மொழிவை இலங்கை கடந்த மாதம் நிராகரித்தது.

இது, முக்கியமான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மற்றும் இரண்டு வருட கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அதன் முயற்சிகளை தாமதப்படுத்தும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம், பங்கு பத்திரகாரர்களின் முன்மொழிவுகளுக்கு இணங்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

முன்னதாக பங்குபத்திரகாரர்களின் முன்மொழிவுக்கும் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இல்லையென்று இலங்கையின் முக்கிய பொருளாதார நிபுணர் ஒருவரும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...