3 14
இலங்கைசெய்திகள்

திருடன் என்ற பட்டத்துடன் சாகப் போகின்றேனா..! மகிந்தவிற்கு ஏற்பட்ட கவலை

Share

திருடன் என்ற பட்டத்துடன் சாகப் போகின்றேனா..! மகிந்தவிற்கு ஏற்பட்ட கவலை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (mahinda rajapaksa)தனக்குச் சொந்தமில்லாத ஐந்து சதத்தை கூட தான் பெற்றுக் கொள்ளவில்லை என தன்னிடம் தெரிவித்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sajara kariyawasam) தெரிவித்துள்ளார்.

1970 ஆம் ஆண்டு முதல் நாட்டிற்காக உழைத்த போதிலும் இன்று நாட்டு மக்களிடம் இருந்து திருடன் என்ற பெயருடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த அபத்தமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி விரைவாக அதனை நீக்குவோம் என்று கூறிய போது, ​​தான் அவ்வளவு காலம் வாழ்வேனா என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியதாக சாகர காரியவசம் தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசியல் அதிகாரம் பெறுவதற்காக, எந்தத் தவறும் செய்யாத ஒரு மனிதனின் பண்பைக் கொன்று பிணங்களை குவிப்பதை விட பாவம் வேறொன்றுமில்லை என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
world 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பு: தனியார்மயமாக்கல் குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை!

தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு (SriLankan Airlines) புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்துக்கள் குறித்து அதிகாரிகளின் எச்சரிக்கை!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சாலைப் போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் பட்டாசு தொடர்பான...

world 27
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய...

world 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா ஜயவர்தன நியமனம்!

இலங்கை முதலீட்டுச் சபையின் (Board of Investment – BOI) பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா...