இலங்கைசெய்திகள்

இலங்கையில் உயிரிழக்கும் காட்டு யானைகள்

rtjy 53 scaled
Share

இலங்கையில் உயிரிழக்கும் காட்டு யானைகள்

2023 அக்டோபர் மாதம் வரை இலங்கையில் மொத்தம் 399 யானைகள் இறந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை யானை-மனித மோதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இயற்கை காரணங்களினாலும் கணிசமான எண்ணிக்கையிலான காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக திணைக்களத்தின் விளம்பர அதிகாரி ஹாசினி சரத்சந்திர தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 74 யானைகளும், மின்சாரம் தாக்கி 47 யானைகளும், ஹக்கபட்டாசு பாவனையால் 39 யானைகளும், விசவாயு தாக்கி 3 யானைகளும், தொடருந்து விபத்தில் 19 யானைகளும், வீதி விபத்தில் ஒரு யானையும், விவசாய கிணற்றில் விழுந்து நான்கு யானைகளும் உயிரிழந்துள்ளன.

இதுமட்டுமன்றி மேலும் பல்வேறு சம்பவங்கள் காரணமாக 15 யானைகள் இறந்துள்ளன. மீதமுள்ள இறப்புகள் முதுமை மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற இயற்கை காரணங்களால் நிகழ்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டிலேயே யானைகளின் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ள ஆண்டாகும், அந்த ஆண்டில் 439 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, 2022 உடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இந்த ஆண்டில் யானை மரணங்கள் அதிகளவில் பதிவாகும் வாய்ப்புக்கள் அதிகம் என ஹாசினி சரத்சந்திர கூறியுள்ளார்.

Share
Related Articles
15 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு பயணிக்கவேண்டாம்; அமெரிக்கா உட்பட நாடுகள் விடுத்துள்ள பயண எச்சரிக்கை

இந்தியா நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பயணிப்பதற்கெதிராக அமெரிக்கா உட்பட பல நாடுகள்...

12 8
இலங்கைசெய்திகள்

தலைக்கவசம் அணிந்து நடமாடுவோருக்கு எச்சரிக்கை !

உந்துருளிகளில் பயணிக்கும் போது, முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருப்பவர்களுக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை...

14 8
இலங்கைசெய்திகள்

சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ரணில் கட்சி

எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று...

13 8
இலங்கைசெய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் தெரிவு

முன்னிலை சோசலிசக் கட்சிக்கான முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜே.வி.பி.யின் முன்னாள்...