rtjy 330 scaled
இலங்கைசெய்திகள்

சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு அதிகாரம்

Share

சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு அதிகாரம்

முன்மொழியப்பட்டுள்ள சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு (IPSA) கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றும் அதிகாரம் இருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு புதிய நாடாளுமன்ற தரநிலைகள் யோசனையின் கீழ் அமைக்கப்படும், இந்த நிலையில், சட்டமூலத்தின் பூர்வாங்க வரைவு தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் முன்வைத்த கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் சட்டமூலத்தின் ஆரம்ப வரைவு தயாரிக்கப்பட்டதுடன் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படுவதை உத்தேச சட்டம் உறுதி செய்யும் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள யோசனையின் முக்கிய நோக்கங்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பகத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தொழில்முறை ஆகியவற்றை உறுதி செய்வதாகவும், அதன் மூலம் நாடாளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதாகவும் இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...