20 1
இலங்கைசெய்திகள்

நண்பனுடன் இணைந்து மனைவியைக் கொலை செய்த கணவன் – பொலிஸார் தகவல்

Share

நண்பனுடன் இணைந்து மனைவியைக் கொலை செய்த கணவன் – பொலிஸார் தகவல்

தலங்கம, தலஹேன பகுதியில் அமைந்துள்ள வீட்டில் மனைவியைக் கொன்று 5 நாட்களாக சடலத்தை மறைத்துவைத்த கணவனும், சந்தேகநபரான நண்பரும், நேற்று அதிகாலை தலங்கம பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான கணவனும், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அதிக அடிமையாகியிருந்த அவரது நண்பரும், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் அவரைக் கொன்றதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான தாருகா நதி குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் தலங்கம, தலஹேன பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட மனைவி, கணவர் மற்றும் அவர்களது குழந்தையுடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சந்தேகநபரின் கணவர் 7-8 வருடங்களாக நண்பர் ஒருவருடன் பழகியுள்ளார், அவர் கலேவெல பிரதேசத்தில் வசிப்பவராகும்.

கடந்த 6 ஆம் திகதி கணவர் தனது நண்பருடன் வீட்டில் ஐஸ் போதை பொருள் பருகிக் கொண்டிருந்த போது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

பின்னர் கணவரின் நண்பர் மனைவியை கத்தியால் தலையில் அடித்து கொன்று உடலை வீட்டில் மறைத்து வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் இருந்தனர்.

நேற்று அதிகாலை இருவரும் தலங்கம பொலிஸில் சரணடைந்ததுடன் பெண்ணை தாங்களே கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...