16 14
இலங்கைசெய்திகள்

பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

Share

பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

ஹோமாகம பகுதியில் உயிரிழந்த நபர் ஒருவரை அடையாளம் காண, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் சராசரியாக 05 அடி 02 அங்குல உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு 01.10.2024 அன்று முறைப்பாடு கிடைத்துள்ளது.

உயிரிழந்த நபர் தொடர்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டு, நீதவான் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 0718 591 655

ஹோமாகம பொலிஸ் நிலையம் – 0112855222

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...