24 66a443e99c878
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல்! களத்தில் இறங்குவதை உறுதிப்படுத்திய 4 வேட்பாளர்கள்

Share

ஜனாதிபதி தேர்தல்! களத்தில் இறங்குவதை உறுதிப்படுத்திய 4 வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரையில் 4 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

இதற்கமைய ரணில் விக்ரமசிங்க (சுயேட்சை), சரத் கீர்த்திரத்ன (சுயேட்சை), ஹிட்டிஹாமிலாகே தொன் ஓஷல லக்மால் அனில் ஹேரத் (அபிநவ நிவஹல் பெரமுன), ஏ.எஸ்.பி. லியனகே (இலங்கை தொழிலாளர் கட்சி) ஆகியோர் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...