images 10
இலங்கைசெய்திகள்

இலங்கை பெண்களுக்கு அவசர எச்சரிக்கை! சமூக ஊடகங்களை நாடாதீர்..

Share

சமூக ஊடகங்களின் வாயிலாக, முகத்திற்கு பயன்படுத்தும் கிரீம் வகைகளை கொள்வனவு செய்யும் பெண்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சருமத்தை வெண்மைப்படுத்தும் கிரீம் உள்ளிட்ட மேலும் பல கிரீம்கள் அவற்றின் காலாவதி திகதி மாற்றியமைக்கப்பட்டு சமூக ஊடகங்களின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு காலாவதியான கிரீம் வகைகளை விற்பனை செய்து வந்த கொழும்பு – ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள இரண்டு கடைகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

இராஜகிரிய ஒபேசேகரபுர மற்றும் அம்பகஹ சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள இரு கடைகளே பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விற்பனை நிலையங்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கிரீம் வகைகளின் காலாவதி திகதியை மாற்றி அதனை சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரு கடைகளிலும் இருந்த அனைத்து கிரீம் வகைகளையும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...