tamilni 111 scaled
இலங்கைசெய்திகள்

மோசடியான முறையில் டுபாய்க்கு சென்ற இலங்கையர்கள் நிர்க்கதி

Share

மோசடியான முறையில் டுபாய்க்கு சென்ற இலங்கையர்கள் நிர்க்கதி

வாகன சாரதி தொழிலுக்கு தகுதியில்லாத சிலர், வாடகை சிற்றூந்து நிறுவனமொன்றில் சாரதிகளாக சேரும் வகையில் மோசடியான முறையில் டுபாய்க்கு சென்று நிர்க்கதியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அங்கு வாகன சாரதி பரீட்சையில் சித்தியடைய முடியாமல் அவர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

200 இலங்கையர்கள் இந்த மோசடி முறையின் கீழ் டுபாய் சென்றுள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குழுவில் உள்ள சிலர் தேவையான திறன்கள் இல்லாமல் மோசடியாக அங்கு சென்றுள்ளனர். இன்னும் சிலர் சாரதி தேர்வில் தேவையான திறமைகளை பெற்றிருந்தும் டுபாயில் தோல்வியடைந்தனர்.

அதேநேரம் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் திரும்பி வர விரும்புகிறார்கள் என்று கூறிய அமைச்சர் அவர்களை திரும்ப அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...