கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றைச் சோதனைக்குட்படுத்தியபோது நான்கு வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) மாலை பதிவாகியுள்ளது. வெள்ளவத்தைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34, 36 மற்றும் 38 வயதுடைய தாய்லாந்து நாட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
வெள்ளவத்தை பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.