16 13
இலங்கைசெய்திகள்

மலையக மக்களுக்காக நாடாளுமன்றில் குரல் கொடுத்த சிறீதரன் எம்.பி

Share

உலக வரைபடத்தில் லயன்களில் வாழ்பவர்களாக மலையக மக்களே இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Sridharan) தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் வாழ்க்கையை இந்த அரசாங்கம் அபிவிருத்தி செய்தால் அரசு வரலாற்றில் இடம்பிடிக்கும் என சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (09) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “மலையக மக்களின் அடிப்படை சம்பள பிரச்சினை தொடர்பில் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் ஆதரவளிப்போம்.

மலையக மக்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களோகவே உள்ளனர். உலக வரைபடத்தில் லயன்களில் வாழ்பவர்களாக மலையக மக்களே இருக்கிறார்கள்.

எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி மலையக மக்கள் வாழ்கின்றனர். அவர்களுடைய வாழ்வில் மாற்றம் மிகவும் முக்கியமானது.

நலன்புரி நடவடிக்கைள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

நலன்புரி தேவைப்படுவோருக்கு இன்றி வசதி படைத்தோருக்கு நலன்புரி சென்றடைந்ததை காணமுடிகின்றது. தேவையுடையோர் பயனடைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இந்த அரசாங்கத்திலாவது மலையக மக்களுக்கு சொந்த நிலம் மற்றும் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டால் வரலாற்றில் சாதனை புரிந்த அரசாக மாறக்கூடும்” என்று தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...