16 13
இலங்கைசெய்திகள்

மலையக மக்களுக்காக நாடாளுமன்றில் குரல் கொடுத்த சிறீதரன் எம்.பி

Share

உலக வரைபடத்தில் லயன்களில் வாழ்பவர்களாக மலையக மக்களே இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Sridharan) தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் வாழ்க்கையை இந்த அரசாங்கம் அபிவிருத்தி செய்தால் அரசு வரலாற்றில் இடம்பிடிக்கும் என சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (09) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “மலையக மக்களின் அடிப்படை சம்பள பிரச்சினை தொடர்பில் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் ஆதரவளிப்போம்.

மலையக மக்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களோகவே உள்ளனர். உலக வரைபடத்தில் லயன்களில் வாழ்பவர்களாக மலையக மக்களே இருக்கிறார்கள்.

எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி மலையக மக்கள் வாழ்கின்றனர். அவர்களுடைய வாழ்வில் மாற்றம் மிகவும் முக்கியமானது.

நலன்புரி நடவடிக்கைள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

நலன்புரி தேவைப்படுவோருக்கு இன்றி வசதி படைத்தோருக்கு நலன்புரி சென்றடைந்ததை காணமுடிகின்றது. தேவையுடையோர் பயனடைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இந்த அரசாங்கத்திலாவது மலையக மக்களுக்கு சொந்த நிலம் மற்றும் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டால் வரலாற்றில் சாதனை புரிந்த அரசாக மாறக்கூடும்” என்று தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...