16 13
இலங்கைசெய்திகள்

மலையக மக்களுக்காக நாடாளுமன்றில் குரல் கொடுத்த சிறீதரன் எம்.பி

Share

உலக வரைபடத்தில் லயன்களில் வாழ்பவர்களாக மலையக மக்களே இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Sridharan) தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் வாழ்க்கையை இந்த அரசாங்கம் அபிவிருத்தி செய்தால் அரசு வரலாற்றில் இடம்பிடிக்கும் என சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (09) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “மலையக மக்களின் அடிப்படை சம்பள பிரச்சினை தொடர்பில் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் ஆதரவளிப்போம்.

மலையக மக்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களோகவே உள்ளனர். உலக வரைபடத்தில் லயன்களில் வாழ்பவர்களாக மலையக மக்களே இருக்கிறார்கள்.

எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி மலையக மக்கள் வாழ்கின்றனர். அவர்களுடைய வாழ்வில் மாற்றம் மிகவும் முக்கியமானது.

நலன்புரி நடவடிக்கைள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

நலன்புரி தேவைப்படுவோருக்கு இன்றி வசதி படைத்தோருக்கு நலன்புரி சென்றடைந்ததை காணமுடிகின்றது. தேவையுடையோர் பயனடைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இந்த அரசாங்கத்திலாவது மலையக மக்களுக்கு சொந்த நிலம் மற்றும் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டால் வரலாற்றில் சாதனை புரிந்த அரசாக மாறக்கூடும்” என்று தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...