tamilni 117 scaled
இலங்கைசெய்திகள்

மேலும் பலருக்கு இன்று கிடைக்கப்போகும் பணம்

Share

மேலும் பலருக்கு இன்று கிடைக்கப்போகும் பணம்

2 இலட்சத்து 57 ஆயிரத்து 170 அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

அதன்படி இன்றைய தினம் (08.09.2023) குறித்த அஸ்வெசும பயனாளிகளுக்கான பணம் வங்கிகளில் வைப்பு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 1550 மில்லியன் ரூபா இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்டத்தில் மாத்திரம் 6 இலட்சத்து 89 ஆயிரத்து 803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 4.395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருந்தது.

எனினும் எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் குறித்த ஒரு நாளில் இந்தக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாவது கட்டமாக மேலும் 257,170 பயனாளிகளுக்கு ஜூலை மாதத்துக்கான பணம் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் மேலும், குறித்த பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நாளைய தினம் வரவு வைக்கப்படும்.

நலன்புரி நன்மைகள் சபை கணக்குகளைச் சரிபார்த்த பிறகு மீதிப் பயனாளிகளுக்குப் பணம் செலுத்தப்படும்.

ஜூலை மாதத்திற்கான பணம் செலுத்திய பிறகு அனைத்து பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான பணத்தை செலுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
26 6978fa83d48ed
செய்திகள்உலகம்

சீனா – ஜப்பான் இடையே விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 49 வழித்தடங்களில் சேவைகள் ரத்து; பயணிகளுக்குக் கட்டணத்தை மீள வழங்கத் தீர்மானம்!

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பெப்ரவரி...

1769561293 Sri Lanka former President Ranil Wickremesinghe Colombo Court 6
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று...

GettyImages 2220430732
உலகம்செய்திகள்

அமெரிக்கா – கனடா இடையே போர் விமானப் போர்: F-35-ஐ வாங்கத் தவறினால் வான்வெளியை ஆக்கிரமிப்போம்– அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை!

கனடா தனது வான் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யத்...

26 69753e82ece93
உலகம்செய்திகள்

மதுரோ கைது: Discombobulator என்ற ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான தாக்குதலில், அமெரிக்கப் படைகள் ‘Discombobulator’ என்ற மர்மமான ரகசிய...