வங்கியில் வைப்பிலிடப்படும் இரு மாதங்களுக்கான பணம்!
இலங்கைசெய்திகள்

வங்கியில் வைப்பிலிடப்படும் இரு மாதங்களுக்கான பணம்!

Share

வங்கியில் வைப்பிலிடப்படும் இரு மாதங்களுக்கான பணம்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட பெயர் பட்டியலில் மாற்றம் ஏற்படும் போது புதிதாக உள்வாங்கப்படுவோருக்கான ஜூலை, ஆகஸ்ட் மாத தவணை கொடுப்பனவுகள் ஒரே நேரத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அரச நலன்புரித் திட்ட கொள்கைக்கு அமைய கிடைக்கப் பெற்ற 33 இலட்ச விண்ணப்பதாரிகளில் 70 சதவீத சமுர்த்தி பயனாளர் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஊடாக 22 இலட்சம் குடும்பங்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்துக்கு அமைய நிவரணத் தொகை வழங்கப்படவுள்ளது. இந்த தொகை 16.8 இலட்சம் சமுர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

அத்துடன் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

சமுர்த்தி பயனாளர் குடும்பங்களில் 1,280,747 பேர் காப்புறுதிப் பலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதுடன் அவர்களில் 70 சதவீதமான 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி அஸ்வெசும திட்டத்தில் 11 இலட்சம் குடும்பங்கள் நிவாரணம் பெற தகுதி பெற்றுள்ளார்கள்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் தகுதி இருந்தும் எவரேனும் புறக்கணிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயம் நியாயம் வழங்கப்படும். இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 990,000 மேன்முறையீடுகளும், 70,000 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளவர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு இம்மாதத்தின் இறுதி பகுதியில் இருந்து வழங்கப்படும். மேன்முறையீடுகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக முழுமையாக பரிசீலனை செய்யப்படுகிறது.

பரிசீலனைகளை தொடர்ந்து பெயர் பட்டியலில் மாற்றம் ஏற்படும் போது புதிதாக உள்வாங்கப்படும் பயனாளர்களின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத தவணை கொடுப்பனவு ஒரே நேரத்தில் வழங்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நலத்திட்ட உதவி கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் ஜனாதிபதி அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...